சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் மாலை (03) அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கூட்ட மண்டபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்னளை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஓன்றியத்தின் தலைவர் எஸ்எம்.அறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர் எம்.ஏ.அப்துல் லத்தீப் ஏ.ஜே.கபூருக்கும், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கே.றிஸ்வி யஹ்ஷர் ஈழமதி ஜப்பாருக்கும், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் எஸ்.எல்.எம்.அபூபக்கர் ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும், பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.அப்துல் முனாப், எஸ்.எல்.முனாஸ் ஆகியோர்கள் அருகில் நிற்பதையும், கலந்து கொண்ட ஊடகவியலாளர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
(படங்கள்: எம்.எஃப்.அலா சிபாக்)
(படங்கள்: எம்.எஃப்.அலா சிபாக்)