
ஓவர்சீஸ் மற்றும் ஐ.சி.ஈ.ஐ. நிருவனமும் இணைந்து நடைமுறைப்படுத்தும் 80 இலட்சத்தி 40 ஆயிரம் ரூபாவுக்கான விதைநெல் சுத்திகரிப்பு கட்டிட நிர்மாணப் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை முல்லைத்தீவில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதி விவசாய பிரதிப் பணிப்பாளர் டி.எம்.என்.தயாரத்ன மற்றும் அதிதிகளான விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் வை.வி.இக்பால், விதைத்தர நிர்ணய பொருப்பதிகாரி எம்.ஐ.நஸீர் ஆகியோருக்கு மாலை அணிவித்து வரவேற்பதையும், பிரதம அதிதி அடிக்கல் நாட்டுவதையும், இந்நிகழ்வில் விஷேட துஆப் பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்.
(படங்கள்: எம்.ஐ.முஹம்மட் பைஷல்)