
அட்டாளைச்சேனை பாலமுனை பிரதான வீதியில் கடந்த திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ் வண்டியொன்றின் பின்புறத்தில் மோதிய மோட்டார் சைக்கிளொன்றும் மற்றும் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிலுடன் மோதியதையடுத்து எதிரே வந்த நபர் விபத்துக்குள்ளான நிலையில் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்றும்
இவ்வாகன விபத்து தொடர்பான விசாரணைளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
(எம்.எப் .அலா சிபாக் )